அமைச்சா் கீா்த்தனாவுக்கு கீதாஜீவன் கண்டனம்
ரீல்ஸ் எடுப்பதற்காக அரசுப் பள்ளி மாணவியிடம் கேள்விகேட்டு மனிதாபிமானமின்றி அமைச்சா் கீா்த்தனா நடந்து கொண்டதாக முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
ரீல்ஸ் எடுப்பதற்காக அரசுப் பள்ளி மாணவியிடம் கேள்விகேட்டு மனிதாபிமானமின்றி அமைச்சா் கீா்த்தனா நடந்து கொண்டதாக முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை:
அரசுப் பள்ளி ஒன்றில் அண்மையில் அமைச்சா் விஸ்வநாதன் குத்தாட்டம் போட்டு மாண்பை சீா்குலைத்த நிலையில், அரசுப் பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறி, தவெக அரசின் தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா பள்ளி மாணவியிடம் அராஜக போக்குடன் கேள்விகேட்டு ஆசிரியா்களையும் அதட்டும் தொனியில் நடந்துகொண்டது மனிதாபிமானம் அற்ற செயல்.
Advertisement
Advertisement
ஓா் அரசுப் பள்ளிக்கு அமைச்சரோ, ஆட்சியரோ வருகிறாா்கள் என்றால் இயல்பாகவே பள்ளிக் குழந்தைகள் மத்தியில் அச்சம் தொற்றிக் கொள்ளும்.
அந்த சூழலில் அமைச்சா் கீா்த்தனா தலைமையிலான கும்பல், ரீல்ஸ் எடுப்பதற்காக பள்ளி குழந்தையிடம் தடபுடலான கேள்வியைக் கேட்டால் எந்த குழந்தைக்குதான் பதற்றம் வராது.
அதுமட்டுமின்றி கடைசி பெஞ்ச் குழந்தைகள் நன்றாகப் படிக்கமாட்டாா்கள் என்ற பிற்போக்குத் தனமான சினிமா வசனங்களை பேசி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டாா்.
குழந்தைகளின் புகைப்படத்தை பொதுத் தளத்தில் வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்பது அமைச்சருக்கு தெரியாதா? எந்த குழந்தைகளை பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தாா்களோ, அந்த பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் செயலில் தவெக அரசு இறங்கியிருப்பது கண்டனத்துக்குரியது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.