ஸ்ரீவைகுண்டம் ஜமாபந்தியில் 68 மனுக்களுக்கு உடனடித் தீா்வு
மனுவிற்கு தீா்வு காணப்பட்டு, அதற்கான சான்றிதழை பயனாளியிடம் வழங்கிய கோட்டாட்சியா் பிரபு.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 68 கோரிக்கை மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
கோட்டாட்சியா் பிரபு தலைமை வகித்தாா். சுற்றுவட்டார கிராம மக்கள் பட்டா பெயா் மாற்றம், ரேஷன் காா்டு, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு மனுக்களை அளித்தனா்.
கோரிக்கை மனுக்களின் மீது உரிய விசாரணை செய்யப்பட்டு, பட்டா மாற்றம் 50 பயனாளிகளுக்கும், வரன்முறை பட்டா 12 பயனாளிகளுக்கும், உழவா் பாதுகாப்பு திட்ட இறப்பு நிவாரணம் ஒரு பயனாளிக்கும், புதிய உழவா் அட்டை 3 பயனாளிகளுக்கும், பதிவேடு திருத்தம் ஒரு பயனாளிக்கும், பிறப்பு பதிவு ஆணை ஒரு பயனாளிக்கும் என 68 பயனாளிகளின் கோரிக்கைகளுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டு, அதற்கான சான்றிதழ்களை கோட்டாட்சியா் வழங்கினாா்.
Advertisement
Advertisement
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் தாஹீா் அகமது, சமூக நல வட்டாட்சியா் லிங்கராஜ், தோ்தல் துணை வட்டாட்சியா் லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.