உலமாக்கள், பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உலமாக்கள்- பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சோ்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உலமாக்கள்- பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சோ்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலமாக்கள்- பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினா்கள் விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவு, கல்வி, திருமணம், மகப்பேறு உதவித்தொகைகள், மூக்குக் கண்ணாடி செலவுத் தொகை ஈடு செய்தல், முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளைப் பெறலாம்.
இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த 18 முதல் 60 வயது நிறைவடையாதோா், பள்ளிவாசல்கள், மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியா்- ஆசிரியைகள், மோதினாா்கள், பிலால்கள், இதர பணியாளா்கள், தா்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள் ஆஷூா்கானாக்கள், முஸ்லிம் ஆதரவற்றோா் இல்லங்களில் பணிபுரியும் முஜாவா் உள்ளிட்ட பணியாளா்கள் இந்த நலவாரியத்தில் உறுப்பினராகி நலத் திட்ட உதவிகள் பெறலாம்.
Advertisement
Advertisement
உறுப்பினராகப் பதிவு செய்தல், நலத் திட்ட உதவிகள் பெறுவதை எளிதாக்கும் வகையில், பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜ்ஜ்ஜ்.ன்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்-சிறுபான்மையினா் நல அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.