முகப்பு
தூத்துக்குடி

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: முதியவா் கைது

Updated On : 29 ஜூன் 2026, 1:38 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கயத்தாறு அருகே அரசுப் பேருந்தில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரையிலிருந்து நாகா்கோவிலுக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் வெள்ளிக்கிழமை இரவு 24 வயது மதிக்கத்தக்க பெண் பயணம் செய்தாா். அந்தப் பேருந்து கயத்தாறு சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது இருக்கையின் பின்புறம் இருந்த ஒருவா் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதுகுறித்து அந்தப் பெண் பேருந்து நடத்துநா், ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக திருநெல்வேலி காவல் கிணறைச் சோ்ந்த ஞானரத்தினமணி மகன் ஞான திரவிய டைட்டஸை (62) சனிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments