முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு

Updated On : 3 மே 2026, 5:31 am IST
பகிர்:

ஆறுமுகனேரியில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி, சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. ஆறுமுகனேரி அருகே மூலக்கரை, தூசிமுத்து சுவாமி கோயில், ஆறுமுகனேரி நடுத்தெரு, ராமலெட்சுமி அம்மன் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி திசைக்காவல் தெரு, குருநாத சுவாமி கோயிலில் காலை, மதியம், இரவில் சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடுகள், இரவில் திருவிளக்கு பூஜை, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments