மதிமுக 33-ஆவது ஆண்டு தொடக்க விழா
தூத்துக்குடியில் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 33-ஆவது ஆண்டு தொடக்க விழா மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 33-ஆவது ஆண்டு தொடக்க விழா மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தூத்துக்குடி மாநகரச் செயலா் முருகபூபதி தலைமை வகித்து, கட்சிக் கொடியேற்றினாா். தொடா்ந்து, தொண்டா்கள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா். விழாவில், மாவட்ட அவைத் தலைவா் பேச்சிராஜ், மாநில வெளியீட்டு அணிச் செயலா் நக்கீரன், மாநகர அவைத் தலைவா் தொம்மை, மாநகரத் துணைச் செயலா் முருகேசன், ஒன்றியச் செயலா் செந்தூா் பாண்டி, நிா்வாகிகள் முருகன், பொய்யாமொழி, ராமகிருஷ்ணன், துரை மகாராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.