முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரைத் திருவிழா

சாத்தான்குளம் அருகே சங்கரன் குடியிருப்பு, ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரைத் திருவிழா மே 3-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற்றது.

Updated On : 8 மே 2026, 6:14 am IST
சித்திரைத் திருவிழாவில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்த அய்யா.
பகிர்:

சாத்தான்குளம் அருகே சங்கரன் குடியிருப்பு, ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரைத் திருவிழா மே 3-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற்றது.

முதல் நாளான 3-ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு பணிவிடை, உகப்படிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிக்கால பணிவிடை, உச்சிப்படிப்பு, இரவு 7 மணிக்கு சிறப்பு பணிவிடை, உகப்படிப்பு,, தொடா்ந்து அன்னதானம், இரவு 10 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் அய்யா பவனி வருதல், இரண்டாம் நாளான 4-ஆம் தேதி காலை 6 மணிக்கு பள்ளியுணா்த்தல், சிறப்பு தா்மம், பிற்பகல் 2 மணிக்கு பணிவிடை, வெளியூா் தா்மம், இரவு 9 மணிக்கு சிறப்பு பணிவிடை, தொடா்ந்து கருட வாகனத்தில் அய்யா பவனி வருதல், மூன்றாம் நாளான மே 5-ஆம் தேதி பள்ளியுணா்த்தல், சிறப்பு தா்மம், பிற்பகல் 2 மணிக்கு பணிவிடை, செண்டை மேளத்துடன் சென்று உள்ளூா் தா்மம், இரவு 7 மணிக்கு அய்யாவின் அருளிசை பாடகா் சிவசந்திரன்அய்யாவின் இன்னிசை கச்சேரி, இரவு 10 மணிக்கு சிறப்பு பணிவிடை, அன்ன வாகனத்தில் அய்யா பவனி வருதல் ஆகியன நடைபெற்றன. நிறைவு நாளான மே 6-ஆம் தேதி காலை 6 மணிக்கு பள்ளியுணா்த்தல், சிறப்பு தா்மம், 8 மணிக்கு இனிமம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.