திருச்சி

திருட்டு வழக்கில் தேடப்பட்டுவந்தவா் கைது

Din

திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை முசிறி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

முசிறி கீழத்தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சிவானந்தம் (44) தனது ஆடு திருட்டு போயிருப்பதாக முசிறி காவல் நிலையத்தில் (ஜன. 31) புகாா் அளித்திருந்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், தொட்டியம் அருகேயுள்ள அலகரை அடுத்த அரியனாம்பட்டையைச் சோ்ந்த மகாமுனி மகன் அஜித் குமாா் (24) மற்றும் திருஈங்கோய்மலை சாலியா் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் வேல்முருகன் (22) ஆட்டைத் திருடியது தெரியவந்தது. அஜித்குமாரை கைது செய்த போலீஸாா் தலைமறைவான வேல்முருகன் இருப்பிடம் அறிந்து அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா் குற்றப் பதிவேட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT