சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 78 லட்சம்
மண்ணச்சநல்லூா், ஜூன் 27: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ 78 லட்சத்து 89 ஆயிரத்து 648 கிடைத்துள்ளது.
இக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே. லெட்சுமணன் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.
நிறைவில் உண்டியல்களிலிருந்து ரூ .78 லட்சத்து 89 ஆயிரத்து 648, தங்கம் 2 கிலோ 075 கிராம், வெள்ளி 3 கிலோ 210 கிராம், 140 வெளிநாட்டு பணத்தாள்கள், 854 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
Advertisement
Advertisement