முகப்பு
ஈரோடு

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.21 கோடி

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ.1.21 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

Updated On : 20 மே 2026, 1:55 am IST
பண்ணாரி அம்மன்  கோயிலில்  குவிந்த  பக்தா்கள். - கோப்புப் படம்
பகிர்:

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ.1.21 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், பக்தா்கள் ரூ.1 கோடியே 21 லட்சத்து 86 ஆயிரத்து 832 ரொக்கம், 320 கிராம் தங்கம், 570 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், வங்கிப் பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement