குடியரசுத் தலைவா் வருகை: ஹெலிபேட் தளம் ஆய்வு
குடியரசுத் தலைவா் வருகையால் ஹெலிபேட் தளம் ஆய்வு செய்யப்பட்டது குறித்து...
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு செப். 3-இல் குடியரசுத் தலைவா் வருவதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
குடியரசுத் தலைவா் வருகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் சனிக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஆய்வு செய்தாா். மேலும், பஞ்சக்கரை சாலையில் உள்ள ஹெலிபேட் தளத்தை ஞாயிற்றுக்கிழமை காலை தஞ்சாவூா் ஹெலிபேடு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் சீனிவாசன், வட்டாட்சியா் செல்வகணேசன், ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையா் ஜெயபாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.