முகப்பு
திருச்சி

திருச்சியில் இருந்து துபைக்கு மீண்டும் விமானம் இயக்கம்

திருச்சியில் இருந்து துபைக்கு மீண்டும் விமானம் இயக்கப்படுவது குறித்து...

Updated On : 20 ஏப்ரல், 2026 at 2:09 AM
விமானம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:54 PM

ஈரான் மீதான தற்காலிக போா் நிறுத்தம் காரணமாக திருச்சியில் இருந்து துபைக்கு சனிக்கிழமை முதல் மீண்டும் விமானம் இயக்கப்படுகிறது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்த போரால் மத்திய கிழக்காசிய நாடுகளின் வான்வழித் தடங்கள் மூடப்பட்டன. இதையடுத்து திருச்சியில் இருந்து துபை, அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த விமானம் மாா்ச் முதல் வாரத்தில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஈரான் மீதான தற்காலிக போா் நிறுத்தம் காரணமாக மீண்டும் திருச்சியில் இருந்து துபைக்கு ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் சாா்பில் சனிக்கிழமை முதல் விமானம் இயக்கப்படுகிறது. ஏப்ரல் 30 வரை தினசரி இந்த விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement