ஈரான் தாக்கிய சில மணிநேரங்களில்! குவைத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!
குவைத் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது குறித்து...
ஈரான் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்த குவைத் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் கெஷ்ம் தீவின் மீது அமெரிக்க படைகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) அன்று தாக்குதல் நடத்தின.
இதனைத் தொடர்ந்து, பதிலடியாக வளைகுடா நாடான குவைத்திலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில், குவைத்தின் சர்வதேச விமான நிலையம் கடுமையாகச் சேதமடைந்ததுடன் ஒருவர் பலியானார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தாக்குதலில் உருகுலைந்ததாகக் கூறப்பட்ட குவைத் விமான நிலையத்தில் இருந்து இன்று (ஜூன் 3) மீண்டும் குறிப்பிட்ட விமானங்கள் மட்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்கள் மட்டும் தாக்குதலில் பாதிக்கப்படாத மற்றொரு விமான முனையத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.