ஈரான் தாக்கிய சில மணிநேரங்களில்! குவைத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!
குவைத் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது குறித்து...
ஈரான் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்த குவைத் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் கெஷ்ம் தீவின் மீது அமெரிக்க படைகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) அன்று தாக்குதல் நடத்தின.
இதனைத் தொடர்ந்து, பதிலடியாக வளைகுடா நாடான குவைத்திலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில், குவைத்தின் சர்வதேச விமான நிலையம் கடுமையாகச் சேதமடைந்ததுடன் ஒருவர் பலியானார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தாக்குதலில் உருகுலைந்ததாகக் கூறப்பட்ட குவைத் விமான நிலையத்தில் இருந்து இன்று (ஜூன் 3) மீண்டும் குறிப்பிட்ட விமானங்கள் மட்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்கள் மட்டும் தாக்குதலில் பாதிக்கப்படாத மற்றொரு விமான முனையத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Flight operations have resumed at the Kuwait airport, which was severely damaged in the Iranian attack.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.