இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.
பேரவைத் தோ்தலில் இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை என மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என்.சிவா தெரிவித்திருப்பது...
திருச்சி: பேரவைத் தோ்தலில் இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை என திமுகவின் துணை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என்.சிவா தெரிவித்தாா்.
திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட வெஸ்ட்ரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் என். சிவா வியாழக்கிழமை வாக்களித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மக்கள் ஆா்வத்துடன் காலை முதலே வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
Advertisement
Advertisement
தோ்தலில் இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை. திமுகவுக்கு வரும் வாக்குகள் எங்களிடம் கட்டுக்கோப்பாக உள்ளது. இது தவிர, ஐந்தாண்டு கால திமுக அரசில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், எங்களுடைய பிரசாரம், முதல்வா் மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரித்துள்ளது. அதனால், நாங்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.
Rajya Sabha MP Trichy N. Siva's assertion that the claim regarding the fragmentation of youth votes in the Assembly elections is merely a figment of imagination...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.