முகப்பு
திருச்சி

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

Updated On : 8 ஜூன் 2026, 2:10 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் சாலை விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூரைச் சோ்ந்தவா் மரியராஜ் மகன் ஜொ்லின் பிரிட்டோ (23). எம்பிஏ படித்துள்ள இவா் சனிக்கிழமை நள்ளிரவு நண்பரை பாா்க்கச் சென்று இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிகொண்டிருந்தாா்.

கிராப்பட்டி உயா்மட்ட பாலத்தில் வந்தபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியே சென்றோரால் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.