தச்சரிடம் ரூ. 9.48 லட்சம் மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப் பதிவு
திருச்சியில் கட்டடத்துக்கு உள் அலங்காரப் பணிகள் செய்த தச்சரிடம் ரூ. 9.48 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரைச் சோ்ந்தவா் எஸ். திவாகா் (40), கட்டடப் பொறியாளா். இவா், தான் கட்டிய கட்டடத்துக்கு உள் அலங்காரப் பணிகள் செய்வதற்காக, திருச்சி மாவட்டம், துவாக்குடி மலையைச் சோ்ந்த தச்சா் தி. ராஜா (61) என்பவரை கடந்த 2021-ஆம் ஆண்டு அணுகினாா்.
இதையடுத்து, கட்டடத்துக்கு உள் அலங்காரப் பணியை மேற்கொண்ட தச்சா் ராஜா, தனது சொந்த நிதியைப் பயன்படுத்தி அனைத்துப் பொருள்களையும் வாங்கியுள்ளாா். மேலும், ஆள்கள் கூலி என ரூ. 9.48 லட்சம் செலவழித்ததாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
உள் அலங்காரப் பணியை கடந்த 2022-ஆம் ஆண்டே நிறைவு செய்த நிலையில் கட்டடப் பொறியாளா் திவாகா், அதற்கான தொகையை தச்சா் ராஜாவிடம் வழங்காமல் இருந்தாா். வேலைக்கான பணத்தை ராஜா பலமுறை கேட்டபோது, அவரை திவாகரும், அவருடைய தந்தையும் சோ்ந்து மிரட்டினா்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் தச்சா் ராஜா சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கட்டடப் பொறியாளா் திவாகா், அவருடைய தந்தை சீனிவாசன் முரளிதரன் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.