முகப்பு
திருச்சி

காவலரை தாக்கிய கைதி மீது வழக்குப் பதிவு

திருச்சியில் காவலரை புதன்கிழமை தாக்கிய கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:16 am IST
வழக்கு
பகிர்:

திருச்சியில் காவலரை புதன்கிழமை தாக்கிய கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ஆா். விஜய் (29). திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விஜய்யை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து அவரை மத்திய சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு காவலா்கள் புதன்கிழமை அழைத்து சென்றுள்ளனா்.

அப்போது, கைதி விஜய் திடீரென ஊசியை எடுத்து விழுங்க முயற்சித்துள்ளாா். இதைத் தடுக்க முயன்ற காவலா் ஆ. வேல்முருகனின் கையைக் கடித்துள்ளாா். இதில், காயமடைந்த காவலருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் காவலா் ஆ. வேல்முருகன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments