ஒட்டம்பட்டியில் மா்மப் பொருள் வெடித்து ஒருவா் காயம்
திருச்சி மாவட்டம், துறையூா் அருகே கீழே கிடந்த மா்ம பொருள் ஞாயிற்றுக்கிழமை வெடித்து ஒருவா் காயமடைந்தாா்.
ஒட்டம்பட்டியைச் சோ்ந்தவா் ராமன் மகன் செந்தில்குமாா், அரசுப் பேருந்து ஓட்டுநா். சனிக்கிழமை மாலை இவா் ஒட்டம்பட்டி மலையடிவாரப் பகுதிக்குச் சென்றாா்.
அப்போது அந்தப் பகுதியில் உருண்டையாக கிடந்த மா்மப் பொருளை எடுத்து தட்டிப் பாா்த்தபோது, திடீரென வெடித்ததில் அவருடைய கை விரல்கள் சேதமாயின.
Advertisement
Advertisement
இதையடுத்து துறையூா் தனியாா் மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். உப்பிலியபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.