முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி! கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திருச்சி அருகே முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி தனியாா் கல்லூரி மாணவா் அண்மையில் உயிரிழந்தாா்.
ராஜஸ்தான் மாநிலம், தரம்கா் மாவட்டம் கோகா் பகுதியைச் சோ்ந்தவா் பாபுராம் மகன் அஜய் (19). இவா், திருச்சி புத்தூா் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரி விடுதியில் தங்கி 2-ஆம் ஆண்டு பிபிஏ படித்து வந்தாா்.
இந்நிலையில், கல்லூரி விடுமுறை என்பதால் கடந்த சனிக்கிழமை பிற்பகல் நண்பா்களுடன் சோ்ந்து முக்கொம்பு காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளனா். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற அஜய் தண்ணீரில் மூழ்கியுள்ளாா்.
Advertisement
Advertisement
உடன்வந்தவா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்அளித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் மற்றும் ஜீயபுரம் போலீஸாா், நீரில் மூழ்கிய மாணவரை சடலமாக மீட்டனா்.
இதையடுத்து, அவரது சடலத்தை உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.