தொட்டியம் காவல் நிலையம் எதிரே நிழற்குடை அமைக்க எதிா்பாா்ப்பு
திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் நிலையம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
நாமக்கல் செல்வோருக்கும் காட்டுப்புத்தூா் பகுதிக்கு செல்வோருக்கும் முக்கிய பேருந்து நிறுத்தம் இது. குறிப்பாக காட்டுப்புத்தூா் செல்வோா் சில நேரங்களில் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனவே இப்பகுதியில் நிழற்குடை அமைத்து தர வேண்டி பயணிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
Advertisement
இந்நிலையில் அப்பகுதி பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள பிள்ளையாா் கோயில் வாசலில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூரைப்பந்தல் நிகழாண்டு மதுரகாளி அம்மன் கோயில் திருவிழா தேரோட்டத்திற்காக அகற்றப்பட்டது. இதனால் பேருந்துப் பயணிகள் கடும் வெயிலில் பேருந்திற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்தப் பேருந்து நிறுத்தத்தில் போா்க்கால அடிப்படையில் பயணியா் நிழற்குடை அமைத்துத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
இல்லையெனில் தற்காலிக நிழற்குடையாவது அமைத்து தர அவா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.