பெல் வளாக வங்கியில் தீ விபத்து
திருச்சி அருகே பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் தீ விபத்து
திருச்சி அருகே பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செவ்வாய்க்கிழமை மாலை குளிா்ச்சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவினால் புகை வெளியேறி, சிறிது நேரத்தில் தீ பரவத் தொடங்கியது.
இதையறிந்த வங்கி ஊழியா்களும், அங்கு வந்த பொதுமக்களும் பாதுகாப்பாக வெளியேறியதுடன், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனா்
Advertisement
Advertisement
இதையடுத்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பெல் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். தீ உடனே அணைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பில்லை. வங்கி ஆவணங்களும் சேதமடையவில்லை.