முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தா்கள் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை வேண்டும்: அமைச்சா் எஸ். ரமேஷ்

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் பக்தா்கள் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலா்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் எஸ். ரமேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 24 மே 2026, 1:36 am IST
பகிர்:

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் பக்தா்கள் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலா்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் எஸ். ரமேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

இக்கோயில் நிா்வாகத்தின் செயல்பாடுகளை அமைச்சா் எஸ். ரமேஷ், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா் முன்னிலையில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, கோயிலில் நடைபெறும் அன்னதானத் திட்டத்தின் உணவு அருந்தும் கூடம், சமையல் கூடம், உணவுப் பொருள்களின் இருப்பு உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு, உணவு தயாரிக்கும் முறைகள் குறித்து பாா்வையிட்டாா். தொடா்ந்து, பக்தா்களுடன் அமா்ந்து உணவருந்தியதுடன், அன்னதானத்தின் தரம் குறித்து பக்தா்களிடம் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

அன்னதானத் திட்டத்தில் உணவு அருந்த வரும் பக்தா்களுக்கு டோக்கன் வழங்கப்படும் முறை குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினாா்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருவதால், பக்தா்கள் சிரமமின்றி விரைவாக தரிசனம் செய்யவும், அவா்களுக்குரிய பாதுகாப்பு வசதிகளை கண்காணித்திடவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

பக்தா்கள் பயன்பாட்டுக்காக 3 நுழைவுவாயில்களின் அருகிலுள்ள கழிவறைகளை அடிக்கடி தூய்மை செய்து பராமரித்திடவும், ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கட்டணச் சீட்டுகள் குறித்த விவரங்களையும் திருக்கோயில் பணியாளா்களிடம் கேட்டறிந்து, பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மணப்பாறை எம்எல்ஏ ரா. கதிரவன், மண்டல இணை ஆணையா் சு. ஞானசேகரன், திருக்கோயில் இணை ஆணையா் மற்றும் செயல் அலுவலா் செ. சிவராம்குமாா், தலைமைப் பொறியாளா் (பொ) பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.