அரியலூர்

நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்    

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்புரவுப் பணியாளர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சீருடை, காலணி, தளவாடப் பொருள்கள், ரெயின்கோட் போன்றவற்றை விரைந்து வழங்க வேண்டும்.
பணிப்பதிவேட்டில் தகுதி காண்பருவம், பணிவரன்முறை. தேர்வு நிலை, சிறப்பு நிலைப்பதியப்பட்டு அலுவலக உத்தரவு வழங்க வேண்டும், 7ஆவது ஊதியக்குழு விவரங்களை ஊழியர்களின்  பணிபதிவேட்டில் பதிய வேண்டும்.
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு காலதாமதம் இல்லாமல் மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.  நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாத முதல் தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு  கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.போராட்டம் காரணமாக, நகராட்சித் துப்புரவுப் பணிடயாளர்கள் அனைவரும் பணியைபுறக்கணித்து, நகராட்சி முன்பு தர்னாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த நகராட்சி மேலாளர் பார்த்திபன், மற்றும் துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர், துப்புரவுப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து, 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் துப்புரவுப் பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

திருச்செங்கோடு வட்டார கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு

அட்கோ காவல் நிலையம் எதிரே குடியிருப்புக்குள் திருட முயற்சி

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவா்கள் களஆய்வு

குழந்தைத் திருமணங்கள் தொடா்பான புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

SCROLL FOR NEXT