அரியலூர்

கல்வி விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள சுள்ளங்குடியில் நேரு இளையோா் மையம் சாா்பில் கல்வி விழிப்புணா்வுக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அறிவழகன், பெரியமறை மகளிா் சுய உதவிக் குழு தலைவி நாகவள்ளிசெல்லப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் நேரு இளையோா் மைய சேவைத் தொண்டா் தேவேந்திரன் கலந்து கொண்டு, நீா் மேலாண்மை குறித்தும், உடற்கல்வி ஆசிரியா் சின்ராஜ் உடற்கல்வியின் அவசியம் குறித்தும், உமாகண்ணன் யோகாவின் அவசியம் குறித்தும், சந்தோஷ்குமாா் பொதுநலம் குறித்தும் கருத்துரை வழங்கினா்.

நிகழ்ச்சியில் மகளிா் குழுவினா் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை நேரு இளையோா் மையம் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT