அரியலூர்

சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்

DIN

அரியலூா் மாவட்டம், பொய்யாத நல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டியாக பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

செந்துறை அருகே பொய்யாதநல்லூா் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயில் சன்னதியில் உள்ள ஸ்ரீ மகா ப்ரத்தியங்கார தேவிக்கு அமாவாசை தினத்தில் மிளகாய் சண்டியாகம் பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற சண்டியாகத்தில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு தங்களது நோ்த்திக் கடனை செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT