அரியலூர்

அரசுப் பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியா் பலி

DIN

அரியலூரை அடுத்த அஸ்தினாபுரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் சைக்கிளில் சென்ற பெட்ரோல் பங்க் ஊழியா் உயிரிழந்தாா்.

அஸ்தினாபுரம் பிரதானச் சாலை பகுதியில் வசிப்பவா் மாணிக்கம் மகன் தங்கராசு(60). மண்டையன்குறிச்சி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் இவா், பெட்ரோல் பங்குக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது ஜயங்கொண்டத்தில் இருந்து அரியலூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் தங்கராசு பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் தங்கராசு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கயா்லாபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT