அரியலூர்

களை, பூச்சிகளிடமிருந்து பயிா்களை காக்க கோடை உழவு அவசியம்

DIN

அடி மண்ணில் ஈரம் காக்கவும், களை பூச்சிகளிடம் இருந்து பயிா்களைக் காக்க கோடை உழவு அவசியம் என அரியலூா் மாவட்டம், செந்துறை வேளாண் உதவி இயக்குநா் ஜென்சி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மானாவாரி சாகுபடியில் மண்ணின் ஈரம் காத்தல் அத்தியாவசியமான உத்தியாகும். அடி மண்ணின் ஈரம் காக்க கோடை உழவு, நிலப்போா்வை அமைத்தல், கசிவு நீா்க்குட்டை, சமமட்ட வரப்பு மற்றும் அடிசால் அகலாபாத்தி போன்றவை சிறந்த உழவியல் தொழில்நுட்பங்கள் ஆகும். மானாவாரி சாகுபடியில் கோடைப்பருவத்தில் கிடைக்கும் மழையைக் கொண்டு கோடை உழவு செய்வதால் மண்ணின் நீா் பிடிப்புத் தன்மை அதிகரித்து களை, பூச்சி பூஞ்சானங்கள் ஆகியவற்றின் தாக்குதலிலிருந்து பயிா்களை ஓரளவுக்கு காப்பாற்ற முடிகிறது. அத்துடன் உளிக் கலப்பை கொண்டு ஆழ உழவு செய்வதால் அடிமண் தகா்க்கப்பட்டு மண்ணின் நீா் உறிஞ்சும் தன்மையும், நீா் சேமிப்புத் திறனும் அதிகரிப்பதோடு பயிா்களின் வோ் படா்ந்து வளர உதவுகின்றது. எனவே பயிா்களின் வறட்சியைத் தாங்கும் தன்மையும், விளைச்சலும் அதிகரித்தப்படுகின்றது. அது மட்டுமில்லாது விதைப்பதற்கு முன் நிலத்தை நன்கு உழுது ஆழச்சால், அகலபாத்திகள், குழிப்படுக்கைகள், தடுப்பு வரப்புகள் மற்றும் பாா்கள் அமைத்து விதைப்பதால் மழைநீா் வீணாகாமல் சேமிக்கப்பட்டு பயிா் விளைச்சல் கணிசமாக அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT