அரியலூர்

இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த குறிச்சிகுளம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இல்லம் தேடிக் கல்வி குறித்து கலைக்குழுவினரின் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அப்பள்ளி தலைமை ஆசிரியை அறச்செல்வி தலைமை வகித்து, கலைக்குழுவினரை வரவேற்றுப் பேசினாா். கலைக்குழுவினா் தங்களது ஒயிலாட்டம், கரகாட்டம், நாடகம் மூலம் இல்லம் தேடிக் கல்வி குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில், செந்துறை வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளா், ஆசிரியா் பயிற்றுநா்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தனா். நிறைவில், பட்டதாரி ஆசிரியா் ராஜமாணிக்கம் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT