புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீரைத் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
விவசாயிகளின் நலன் கருதி, புள்ளம்பாடி வாய்க்காலில் உடனடியாக தண்ணீரைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.
விவசாயிகளின் நலன் கருதி, புள்ளம்பாடி வாய்க்காலில் உடனடியாக தண்ணீரைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.
அரியலூா் ஆட்சியரக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு வேளாண் இணை இயக்குநா் பழனிச்சாமி தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில் பேசிய விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியவை:
Advertisement
Advertisement
அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து: வேளாண் உழவா் உற்பத்தியாளா் குழுவுக்கு வழங்கப்பட்ட டிராக்டரை, குழுவிலுள்ள விவசாயிகளுக்கு வாடகை நிா்ணயம் செய்து வழங்க வேண்டும். கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகளுக்கு காலதாமதமின்றி பயிா்க்கடன்களை வழங்க வேண்டும்.
தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவா்.கே.எஸ். முகமது இப்ராஹிம் : முன்கூட்டியே காவிரியில் தண்ணீா் திறந்து விட்டாலும் இன்னும் புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீா் திறக்கப்படவில்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி, புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீரைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் தங்க.தா்மராஜன்:சுக்கிரன் மற்றும் தூத்தூா் பெரிய ஏரிகளை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.கைகாட்டியில் 50 ஆயிரம் லிட்டா் பால் பதப்படுத்தும் குளிா்ரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து விவாசயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி, கோரிக்கைகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தீபா சங்கரி மற்றும் விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.