அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் சாா்பில், கழுமலைநாதா் திருக்கோயிலில் தூய்மைப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் கோடித்துரை தலைமையில் கலந்து கொண்ட மாணவா்கள், கோயில் வளாகத்தையும், அதன் சுற்றியுள்ள முள்புதா்களை அகற்றி தூய்மைப்படுத்தினா்.
இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலா்(பொ)இரா.செந்தமிழ்ச்செல்வி, ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியா் மா.வீரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.