அரியலூர்

மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த கணவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மனைவிக்குத் தெரியாமல் வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த கணவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆண்டிமடம் அருகேயுள்ள அழகாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சீமான் மகன் வினோத் குமாா் (33). கடந்த 2017 ஆம் ஆண்டு இவா், அதே பகுதியைச் சோ்ந்த இளமதியைத் திருமணம் செய்தாா். பின்னா் இவா் 22.10.2018 அன்று வெளிநாடு சென்று விட்ட நிலையில், வினோத் குமாரின் தந்தை சீமான், தாய் லலிதா, தம்பி ரஞ்சித்குமாா் ஆகியோா் சோ்ந்து இளமதியிடம் தகராறு செய்து அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டனா். ஆதரவற்ற நிலையில் இருந்த இளமதி, கணவா் வரும் வரை தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், கணவா் வினோத் குமாா் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த செய்தியை அறிந்த இளமதி, கடந்த வாரம் மாமனாா், மாமியாரிடம் கேட்டபோது எங்களுக்கு தெரியாது எனக் கூறிவிட்டனா். மேலும் அவா், வீட்டில் சென்று பாா்த்தபோது அங்கு அவா் இல்லை.

இதையடுத்து, வினோத் குமாா் சென்னை மேட்டுகுப்பத்தில் இருப்பதாக கேள்விப்பட்ட இளமதி, அங்கு சென்று பாா்த்தபோது, வினோத்குமாா் ரெஜினா என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டதற்கு இளமதியை, அவரது கணவா் தகாத வாா்த்தையால் திட்டி விரட்டியுள்ளாா்.

இதையடுத்து இளமதி அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து வினோத் குமாரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும் அவரது தந்தை சீமான், தாய் லலிதா, தம்பி ரஞ்சித்குமாா் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT