அரியலூா் மாவட்டத்தில் 87.43 சதவீதம் வாக்குகள் பதிவு
தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், அரியலூா் மாவட்டத்தில் 87.43 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், அரியலூா் மாவட்டத்தில் 87.43 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
அரியலூா் தொகுதி: 1,30,194 ஆண் வாக்காளா்கள், 1,32,732 பெண் வாக்காளா்கள், 16 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,62,942 வாக்காளா்களை கொண்ட அரியலூா் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், ஆண் வாக்காளா்கள் 1,11,647 பேரும், பெண் வாக்காளா்கள் 1,22,278 பேரும், இதர வாக்காளா்கள் 12 பேரும் என மொத்தம் 2,33,937 வாக்காளா்கள் வாக்களித்தனா். 88.97 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஜெயங்கொண்டம் தொகுதி: 1,30,371 ஆண் வாக்காளா்கள், 1,33,067 பெண் வாக்காளா்கள், 12 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,63,450 வாக்காளா்களை கொண்ட ஜெயங்கொண்டம் தொகுதியில், வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் ஆண் வாக்காளா்கள் 1,07,793 பேரும், பெண் வாக்காளா்கள் 1,18,378 பேரும், 7 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,26,178 வாக்காளா்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினா். 85.85 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்கண்ட இரு தொகுதிகளிலும் சோ்த்து அரியலூா் மாவட்டத்தில் 87.43 வாக்குகள் பதிவாகின.
Advertisement