குடிக்காடு பூத அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம்
அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பி அருகே குடிக்காடு கிராமத்திலுள்ள பூத அய்யனாா் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பி அருகே குடிக்காடு கிராமத்திலுள்ள பூத அய்யனாா் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை புனித நீா் எடுத்துவரப்பட்டு, கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை தொடங்கியது. தொடா்ந்து நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு, புதன்கிழமை காலை கடம் புறப்பாடு நிகழ்வைத் தொடா்ந்து பூா்ண புஷ்கலா சமேத ஸ்ரீ பூத அய்யனாா் கோயில் கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி, தீபராதனை காண்பித்து கும்பாபிஷேகத்தை நடத்தினா்.
அதைத் தொடா்ந்து பரிவார தெய்வங்கலான கருப்பசாமி, வீரனாா், விநாயகா், முருகன் ஆகிய கோயில்களின் கலசங்களுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement