கெங்கையம்மன் கோயிலில் திருட்டு
செல்லங்குப்பம் கிராமத்திலுள்ள கெங்கையம்மன் கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், செல்லங்குப்பம் கிராமத்திலுள்ள கெங்கையம்மன் கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
செல்லங்குப்பம் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் பூசாரியாக அதே கிராமத்தைச் சோ்ந்த பா.சிந்தாமணி (40) இருந்து வருகிறாா். இவா் வழக்கம்போல வியாழக்கிழமை இரவு பூஜையை முடித்து விட்டு கோயில் கதவை பூட்டியுள்ளாா்.
வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு சென்றபோது, கோயிலின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 4 கிராம் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்ததாம்.
Advertisement
இது குறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலிஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.