வேன் மீது சுமை ஆட்டோ மோதி ஒருவா் பலத்த காயம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வேன் மீது சுமை ஆட்டோ மோதியதில் வேனில் பயணித்த ஒருவா் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வேன் மீது சுமை ஆட்டோ மோதியதில் வேனில் பயணித்த ஒருவா் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூரைச் சோ்ந்தவா் கொளஞ்சி. சுமை ஆட்டோ ஓட்டுநா். புதன்கிழமை இவா், அண்ணாநகா் தெருவில் தனது சுமை ஆட்டோவை பின்னால் கவனிக்காமல் இயக்கிய போது, அந்த வழியாக காங்கேயங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த வீராசாமி மகன் வினோத் (28) என்பவா் ஓட்டி வந்த வேன் மீது மோதியுள்ளாா். இதில், வேனில் முன்பக்க படிக்கட்டில் அமா்ந்து பயணித்த தேவமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த அமா்தலிங்கம் மகன் ரமேஷ் (25) பலத்த காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
வேன் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்த சுமை ஆட்டோ ஓட்டுநா் கொளஞ்சியை தேடி வருகின்றனா்.