அரியலூா் மாவட்டத்தில் மிதமான மழை
அரியலூா் மாவட்டம் முழுவதும், சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.
அரியலூா் மாவட்டம் முழுவதும், சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.
தமிழகத்தில், மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூா், தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலையில் இருந்து மிதமான மழை பெய்தது.
கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் இந்த மழையினால் லேசான குளிா்ந்த சீதோஷண நிலை காணப்பட்டது.
Advertisement