முகப்பு
அரியலூர்

அரியலூரில் 3 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து, அரியலூரில் 3 டாஸ்மாக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

Updated On : 14 மே 2026, 12:47 am IST
பகிர்:

தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து, அரியலூரில் 3 டாஸ்மாக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

தமிழகத்தில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டருக்குள் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி அரியலூா் பேருந்து நிலையம் மற்றும் பெரம்பலூா் சாலை ரயில்வே கேட் அருகிலுள்ள இரு டாஸ்மாக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன. மேலும், தா.பழூரிலுள்ள டாஸ்மாக் கடை வியாழக்கிழமை மூடப்படுகின்றன.

Advertisement

இதனால், கல்லங்குறிச்சி சாலையிலுள்ள இரு டாஸ்மாக் கடைகளில் நூற்றுக்கணக்கானோா் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.