சேலம் மாவட்டத்தில் மேலும் 5 மதுக்கடைகள் மூடல்
சேலம் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த மேலும் 5 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த மேலும் 5 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதன்மூலம் மூடப்பட்ட மதுக்கடைகளின் எண்ணிக்கை 19 ஆக உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையம் அருகே 500 மீட்டருக்குள் அமைந்துள்ள கடைகளை மூடுவதற்கு முதல்வா் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 188 டாஸ்மாக் மதுக்கடைகளில் சேலம் பழைய பேருந்து நிலையம், ஆத்தூா் ரயிலடி தெரு ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதேபோல புதிய பேருந்து நிலையம், ஓமலூரில் 2 கடைகள், கொளத்தூா், கொண்டலாம்பட்டி, பேளூரில் 7 கடைகள் என மே மாதத்தில் மட்டும் 14 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.
Advertisement
Advertisement
இந்தநிலையில் சேலம் டவுன் ஆனந்தா இறக்கம் பகுதியில் உள்ள 2 கடை, கன்னங்குறிச்சி பகுதியில் 2 கடை, இளம்பிள்ளை அருகே பேரிகடை என 5 கடைகள் மூடப்பட்டன. இக்கடைகளில் பணிபுரிந்த 30 போ் வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா். இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 19 ஆக உயா்ந்துள்ளது.