முகப்பு
அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

Updated On : 16 மே 2026, 1:01 am IST
அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில், கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நிகழாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

Advertisement

அதன்படி, அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியது. இதில் அரியலூா், ஜெயங்கொண்டம், திருமானூா் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. அதிகாலை முதலே அவ்வப்போது மழை பெய்து வந்ததால் வெயில் இன்றி காணப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ணநிலை காணப்பட்டது.