வாக்குச்சாவடிமறு சீரமைப்பு கூட்டம்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளையும், நகரப் பகுதிகளில் 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளையும், 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் வாக்காளர்கள் சென்று வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளையும் கண்டறிந்து சீரமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் அதிமுக மாவட்டப் பொருளாளர் பி.கே.எஸ். முரளி, நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், திமுக மாவட்டப் பொருளாளர் ஆர். ராமசாமி, வழக்குரைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ம. லட்சுமணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், எம். சின்னையன், பாஜக மாவட்டத் தலைவர் கே. சிவசாமி, கரூர், குளித்தலை கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement