சக தொழிலாளியை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது
ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் வாய்க்கால் சந்து பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(58). இவர் கரூர் குமரன் பள்ளி அருகே உள்ள ஆட்டோ நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
திங்கள்கிழமை அங்கு ஆட்டோ ஓட்டும் திருமாநிலையூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (38) என்பவர்
சத்தியமூர்த்தியிடம், எனக்கு முன்பாகவே எப்படி வாடகைக்கு வந்தவர்களை ஏற்றிச் செல்லலாம் எனக் கேட்டு தகராறு செய்து, சத்தியமூர்த்தியை தாக்கினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து
கோவிந்தராஜை கைது செய்தனர்.