முகப்பு
கரூர்

அமமுக உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

கரூர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பணியில் ஈடுபட்டனர்.

Updated On : 23 ஜூலை 2018, 8:36 am IST
பகிர்:

கரூர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பணியில் ஈடுபட்டனர்.
வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அமமுகவினர் தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கோடங்கிப்பட்டி, திண்ணப்பாநகர், ராயனூர், தாந்தோணிமலை மற்றும் நீலிமேடு, அண்ணா நகர் பகுதியில் மத்திய நகரச் செயலர் கோல்டுஸ்பாட் ராஜா தலைமையில் அக்கட்சியினர் தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பணியில் ஈடுபட்டனர்.
 இதில் சிறப்பு விருந்தினராக மாநில மருத்துவர் அணி துணைச் செயலர் மனோகரன், மாவட்டத் துணைச் செயலர் தாரணிசரவணன் ஆகியோர் பொதுமக்களுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினர்.
நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட  துணைச் செயலர் ஆர்எம்டி. தியாகராஜன், மாவட்ட பேரவை இணைச் செயலர் கார்த்திகேயன், , நகர மீனவரணிச் செயலர்  மணிகண்டன் உள்பட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments