மாட்டுவண்டியில் பைக் மோதி தொழிலாளி சாவு
மாயனூர் அருகே மாட்டுவண்டியில் பைக் மோதி தொழிலாளி இறந்தார்.
மாயனூர் அருகே மாட்டுவண்டியில் பைக் மோதி தொழிலாளி இறந்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மகிளிப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(33), தொழிலாளி. இவர் தனது பைக்கில் சனிக்கிழமை இரவு கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கட்டளை பிரிவு அருகே சென்றபோது திடீரென பைக் நிலைதடுமாறி முன்னால் சென்ற மாட்டு வண்டியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் பைக்கில் இருந்து விழுந்த சந்திரசேகரன் இறந்தார். இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.