கரூர்

தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை உடைத்து கணினி திருட்டு

DIN

மாயனூரில் அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை உடைத்து கணினியைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் மாயனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரத்தினம்(53) வழக்கம்போல கடந்த 14 ஆம் தேதி பள்ளி முடிந்தவுடன் தனது அறையை பூட்டிவிட்டுச் சென்றார். 
திங்கள்கிழமை பள்ளிக்கு வந்துபார்த்தபோது, தனது அறையின்பூட்டை உடைத்து உள்ளே இருந்த கணினியை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது .  
இதுகுறித்த புகாரின்பேரில் மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT