கரூர்

பைக்கில் இருந்து  விழுந்தவர் சாவு

DIN

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். 
கரூர் காந்கிராமம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பாலுசாமி(46). இவர் தனது பைக்கில் புதன்கிழமை இரவு கரூர் - கோவை சாலையில் ஆண்டாங்கோவில் மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது திடீரென பைக்கில் இருந்து நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT