கரூர்

குளித்தலையில் பெண்ணிடம் ஆறரை பவுன் நகை திருட்டு

DIN

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த பிள்ளாபாளையத்தைச் சேர்ந்த வினோத் மனைவி சித்ரா(30). இவர், திங்கள்கிழமை இரவு குளித்தலை சுங்ககேட் பகுதியில் பேருந்துநிறுத்தத்தில் ஆறரை பவுன் நகையைக் கைப்பையில் வைத்துக்கொண்டு நின்றுள்ளார். 
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரு பெண்கள் அவரிடம் இருந்த பையில் பிளேடால் அறுத்து நகையைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின்பேரில் நகையைத் திருடிச் சென்ற இருபெண்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT