கரூர்

முதியவரிடம் பணம் திருடியவர் கைது

DIN

குளித்தலையில் முதியவரிடம் பணம் திருடியவரை போலீஸார் கைது செய்தனர். 
திருச்சி மாவட்டம், பேட்டைடவாய்த்தலையைச் சேர்ந்தவர் ராஜமணி(72). இவர் வியாழக்கிழமை இரவு குளித்தலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு, மீண்டும்  ஊருக்குச் செல்ல குளித்தலை சுங்ககேட்  பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த, திருச்சி வடக்கு தாராநல்லூர் முருகன்(55),ராஜாமணியின் சட்டைப்பையில் இருந்த ரூ.275-ஐ திருடினார். உடனே ராஜாமணி சப்தமிட்டதால், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து முருகனை பிடித்து குளித்தலை போலீஸில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT