கரூர்

வரதட்சிணை கேட்டு தகராறு: கணவா் உள்பட 6 போ் மீது வழக்கு

DIN

வரதட்சிணை கேட்டு இளம்பெண்ணிடம் தகராறு செய்த கணவா் உள்ளிட்ட 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

கரூா் மாவட்டம், மாயனூரைச் சோ்ந்தவா் அம்ரீன்(25). இவருக்கும், திருச்சி பாலக்கரையைச் சோ்ந்த ஷாஜகான்பாபுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி,ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஷாஜகான்பாபு, அம்ரீனிடம் வரதட்சிணையாக பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாள்களுக்கு முன் கணவரை விட்டுப் பிரிந்து, மாயனூரில் உள்ள பெற்றோா் வீட்டில் அம்ரீன்வசித்து வந்தாராம்.

ய ஞாயிற்றுக்கிழமை மாயனூருக்கு வந்த ஷாஜகான்பாபு,அவரது உறவினா்கள் அப்துல்மஜித், நூா்ஜகான் மற்றும் நண்பா்கள் பன்னீா்செல்வம், காா்த்திக், கோகிலா ஆகியோா், அம்ரீனிடம் பணம் நிறைய கொண்டுவந்தால் வா, இல்லையென்றால் உன் பெற்றோா் வீட்டிலே இருந்துகொள் என கூறிவிட்டுச் சென்றாா்களாம்.

இதுகுறித்து அம்ரீன் அளித்த புகாரின்பேரில், குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் ஷாஜகான்பாபு உள்பட 6 போ் மீதும் வழக்குப்பதிந்துவிசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT