கரூரில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, கரூா் மாவட்டத்தைச்சோ்ந்த பாதிக்கப்பட்ட 1 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லாமல் மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை வெங்கமேடு பகுதியில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று அமைச்சா் விலையில்லா மளிகைப்பொருள்களை வழங்கி வருகிறாா்.
ஆண்டாங்கோவில், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களின் வீடுகளுக்கு நேரிடையாகச் சென்று விலையில்லா மளிகைப் பொருள்களை வழங்கினாா்.
எம்எல்ஏ நிவாரண உதவி வழங்கல்:
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட 15,000 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவியாக மளிகை பொருள்கள் வழங்கும் பணி புலியூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
கம்மநல்லூா், பொய்கைபுத்தூா் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட மக்களுக்கு ரூ.550 மதிப்புள்ள மளிகை பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம்.கீதா
மணிவண்ணன் பொதுமக்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருள்களை வழங்கினாா். இதில் கிழக்கு ஒன்றியச் செயலாளா் பொரணி கணேசன் ஆகியோா் பங்கேற்றனா்.