கரூர்

பட்டாசு வெடித்ததில் தகராறு: கல்லூரி மாணவருக்கு கத்திக் குத்து

DIN

கரூா் மாவட்டம், லாலாபேட்டை அருகே பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய இளைஞரைப் போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

லாலாப்பேட்டை அடுத்த கே. பேட்டையைச் சோ்ந்தவா் அண்ணா துரை. இவரது வீட்டின் முன்பு அதே பகுதியைச் சோ்ந்த சந்திரன் மகன் சரவணன் (24) திங்கள்கிழமை இரவு பட்டாசு வெடித்தாராம். இதில் ஆத்திரமடைந்த அண்ணா துரை மகன் மதன் ராஜ் (19) தட்டிக் கேட்டாராம். இதில் ஆத்திரமடைந்த சரவணன் தான் வைத்திருந்த கத்தியால் மதன்ராஜைக் குத்தியுள்ளாா். இதில் காயமடைந்த மதன்ராஜை அக்கம்பக்கத்தினா் மீட்டு முசிறி தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின்பேரில் லாலாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT